search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் வாலிபர் கொலை"

    சேலம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    சேலம்:

    சேலம், ஜாகீர் அம்மாப்பாளையம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மதுசூதனன் (வயது 32). திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளி.

    இவர் கோவை செல்வதற்காக நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள கோவிலில் உட்கார்ந்திருந்தார். அப்போது, அவரது தாய் அங்கு வந்து வீட்டிற்கு வருமாறு மதுசூதனனை அழைத்தார். அதற்கு அவர் நான், வெளியூர் செல்வதாக கூறி விட்டு அங்கு அமர்ந்திருந்தார். நண்பர்கள் 2 பேர் அங்கு வந்து மது குடிக்க செல்லலாம் எனக் கூறி மதுசூதனனை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிக்கொண்டு குடிப்பதற்காக நகரமலை அடிவாரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு வைத்து மது குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட்டு தகராறு செய்ததால் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அவர்களை பார்த்து நீங்கள் யாரும் எங்களை தடுக்கக் கூடாது. இங்கு வரக்கூடாது. எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வோம். நாங்கள் நண்பர்கள். தடுத்தால் உங்களை கொன்று விடுவோம் என்று ஆக்ரோசமாக கூறினார்கள்.

    இதனால் பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இன்று காலையில் அந்த பகுதியில் ரத்தம் ஆங்காங்கே உறைந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து ரத்தம் சிதறி கிடந்த பகுதிகளை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, அருகில் உள்ள கிணற்றில் மதுமசூதனன் பிணமாக கிடந்தார். அவரது உடலை சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து கொலை செய்து, 2 கைகளையும் கயிற்றால் இறுக்கமாக கட்டி கிணற்றில் தூக்கி வீசி சென்றுள்ளது தெரியவந்தது.

    சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பணத் தகராறில் வாலிபரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அஸ்தம்பட்டி, மணக்காடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜி என்கிற விஜய் (வயது 27). இவர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு லோன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் வைத்து மர்ம கும்பலால் விஜய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், விஜய் மீது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் இருப்பதும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக மகேந்திரபுரி, கலிங்கா சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மகன் ராகுல்ராஜ் (24) என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் ராகுல்ராஜ், மரவனேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விஜய் என்கிற ஜெயபிரகாஷ்(28), கலெக்டர் பங்களா பின்புறம் வசிக்கும் செல்வம் மகன் சர்மல்(23), குமாரசாமிபட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (23), ராம்நகர் ஓடை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஸ்ரீரங்கன் (39) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    இதில் ராகுல்ராஜ், ஏன்? விஜயை கொலை செய்தேன் என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தேவைக்காக காரை விஜயிடம் அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கேட்டேன். அதற்கு விஜய் தலா ரூ. 50 ஆயிரமும் அவரது நண்பர் தலா ரூ.50 ஆயிரமும் என சேர்த்து ரூ.1 லட்சம் திரட்டி என்னிடம் கொடுத்தார்கள்.

    கடன் வாங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் விஜயிடம் சென்று எனது அண்ணனுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடப்பதாக கூறி காரை திரும்ப பெற்றுக் கொண்டேன்.

    இதனால் விஜய் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். பணம் எல்லாம் தரமுடியாது. அப்புறம் காரை தருவதாக கூறினேன். பின்னர் சில நாட்கள் கழித்து நான் காரும் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்க வில்லை.

    இதையடுத்து விஜய் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்து பணத்தை கொடுக்குமாறு கூறி கடுமையாக சத்தம் போட்டார்.சில நாட்கள் கழித்து ரூ.80 ஆயிரத்தை விஜயிடம் திருப்பி கொடுத்தேன். அதில் ரூ.50 ஆயிரத்தை விஜய் அவரது நண்பரிடம் கொடுத்தார். ரூ.30 ஆயிரத்தை விஜய் எடுத்துக் கொண்டார். மீதமுள்ள பாக்கி ரூ.20 ஆயிரத்தை என்னிடம் எப்போது தருவாய் என கேட்டார். நானும் பணத்தை தருவதாக கூறி காலம் கடத்தி வந்தேன்.

    சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு விஜய் சென்று எனது அம்மாவை சத்தம் போட்டார். மேலும் உங்களது மகனிடம் பணத்தை கொடுக்க சொல்லுங்கள், இல்லையென்றால் உங்கள் மகனுக்கு மாலை போட்டு நீங்கள் வணங்க வேண்டி இருக்கும் என்று மோசமாக திட்டினார்.

    இதையறிந்த நான் கடும் ஆத்திரம் அடைந்தேன். நான் இல்லாத நேரத்தில் எனது வீட்டிற்கே சென்று சத்தம் போடுகிறாயா? எவ்வளவு தைரியம் இருக்கும். உன்னை விடமாட்டேன் என கோபத்தில் கொப்பளித்தேன். இது பற்றி ஸ்ரீரங்கனிடம் கூறினேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவரும், நண்பர்களும், நானும் சேர்ந்து திட்டம் வகுத்தோம்.

    பணம் தருவதாக கூறி ஸ்ரீரங்கன் வீட்டிற்கு எதிரே குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து விஜய் கொலை செய்து விடலாம் என திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி நானும், எனது நண்பர்களும் சேர்ந்து விஜய்யை குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தோம்.

    போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கொலையாளிகளிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 2 சூரி கத்திகள் கைப்பற்றப்பட்டது. துரிதமாக செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் பாராட்டினார்.

    சேலத்தில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் வாலிபரை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    சேலம்:

    சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜய் (வயது 28). இவர் ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் அமர்ந்து நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது விஜயை 4 பேர் கும்பல் சூழ்ந்து நின்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தப்பி ஓடியவர்களில் ஒருவர் சின்ன திருப்பதியை சேர்ந்த ரகுல்ராஜ் என்பதும் கொலையுண்ட விஜயின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.

    விஜயிடம் ரகுல் ராஜ் பணம் வாங்கி உள்ளார். இந்த பணத்தை திருப்பி தருமாறு விஜய் கேட்டுள்ளார். இதனால் ரகுல் ராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை தொடர்ந்து விஜய், ரகுல் ராஜின் வீட்டிற்கு சென்று உறவினர் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரகுல்ராஜ் பணம் தருவதாக கூறி விஜயை ராம் நகருக்கு அழைத்துள்ளார். அங்கு மது அருந்தும் போது அவரை, ரகுல்ராஜ் கூட்டாளிகளுடன் சேர்ந்த துடிக்க துடிக்க கொலை செய்தார் என்பது தெரியவந்தது

    தலைமறைவாக உள்ள ரகுல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×